|
அரியாலை நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வறுத்தலைவிழானை வதிவிடமாகவும், கொழும்பு தெஹிவளை முகாந்திரம் வீதியை தற்போதைய நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் துரைசிங்கம் அவர்கள் 08.07.2010 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கச்சியம்மாவின் புதல்வரும், காலஞ்சென்ற அழகரத்தினம், பாக்கியம் அவர்களின் மருமகனும்,
சிவலட்சுமி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி(நோர்வே), பிரசாந்தி(கனடா), Dr.துஷ்யந்தன்(கொழும்பு), சுஜந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யுவகாந்த்(நோர்வே), அமிர்தலிங்கம்(கனடா), ரமேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, காலஞ்சென்ற மகாலிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற மன்மதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உருக்குமணி, பத்மாவதி, காலஞ்சென்ற சாவித்திரி, நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, சற்குணதேவி, ரேணுகா, விஜயலட்சுமி, சுப்பிரமணியம், நித்தியலட்சுமி, சுந்தரலிங்கம், ரவீந்திரன், திலகராணி(நோர்வே)ஆகியோரின் மைத்துனரும்,
பரஞ்சோதி, கமலாதேவி, காலஞ்சென்ற குலசேகரம், அரியமலர், அருளாநந்தம், பத்மலோசினி அவர்களின் சகலனாரும்,
கிஷாந்த்(நோர்வே), சர்விஷா(நோர்வே), சாருஜன்(கனடா), சாகித்யா(அவுஸ்திரேலியா), கவினாஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 14:00 மணிக்கு கல்கிசை மயாணத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர் |