|
பிரித்தானியா Tooting ஐ சேர்ந்த தருண் உமாசங்கர் அவர்கள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் உமாசங்கர் - செந்தமிழ்செல்வி(காந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஹர்ணிதாவின் அன்புச் சகோதரனும்,
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை சேர்ந்த சிவானந்தன் - சரோஜினிதேவி, சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, குலமணி இராசையா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர் |